என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு: கோவையில் அ.தி.மு.க. நிர்வாகி கைது
- சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வந்த அ.தி.மு.க. நிர்வாகி சுப்பிரமணியம் மீது கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- அ.தி.மு.க. நிர்வாகி சுப்பிரமணியம் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அன்னூர்:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மசக்கவுண்டன் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் என்ற அக்ரி சுப்பிரமணியன் (வயது 46).
இவர் கோவில்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். மேலும் கோவை புறநகர் வடக்கு அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராக உள்ளர்.
சுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவர்களது குடும்பத்தினர் குறித்தும் அவதூறு தகவல்களை பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வந்த அ.தி.மு.க. நிர்வாகி சுப்பிரமணியம் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்