search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தம்மம்பட்டி பகுதியில் இரவில் வேட்டைக்கு சென்ற நரிக்குறவர் மின்சாரம் தாக்கி பலி
    X

    தம்மம்பட்டி பகுதியில் இரவில் வேட்டைக்கு சென்ற நரிக்குறவர் மின்சாரம் தாக்கி பலி

    • ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி செங்குடி நகரை சேர்ந்த நரிக்குறவர் கொடிவேல்.
    • தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி செங்குடி நகரை சேர்ந்த நரிக்குறவர் கொடிவேல் (வயது 56). இவர் கூலி தொழில் செய்து வந்தார்.

    இவர் மற்றும் இவரது உறவினர்கள் 5 பேர் நேற்று இரவு தம்மம்பட்டி அருகே உள்ள மண்மலை பாலக்காடு பகுதியில் முயல், பன்றி வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் சங்கர் என்பவர் தனது சோளக்காடு தோட்டத்தில் பன்றிகள் எதுவும் பயிர்கள் தாக்காமல் இருக்க மின்வேலி அமைத்துள்ளார்.

    இந்த மின்வேலியில் கொடிவேல் எதிர்பாராதவிதமாக சிக்கி சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பரிதாபமாக இறந்தார். உடன் சென்ற 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இது பற்றி தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு கொடிவேல் உடலை மீட்டனர். இதையடுத்து கொடிவேல் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதபடி உள்ளனர்.

    உயிரிழப்புக்கு கடுமையான நிலத்தின் உரிமையாளர் சங்கர் என்பவரை பிடித்து தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர், மின்வேலி அமைக்க வருவாய்துறை, காவல் துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, மின்சார துறையிடம் அனுமதி வாங்கினாரா? அந்த மின்வேலியில் உயர் அழுத்த மின்சாரம் கொடுத்தாரா? என சங்கரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×