search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
    X

    தருமபுரியில் சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

    • கைப்பந்து, கபடி, கோகோ, பால் பேட்மிட்டன், ஹேண்ட் பால் ஆகிய 5 குழு போட்டிகள் நடைபெற்றது.
    • இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி சரக அளவில் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    கைப்பந்து, கபடி, கோகோ, பால் பேட்மிட்டன், ஹேண்ட் பால் ஆகிய 5 குழு போட்டிகள் நடைபெற்றது.

    இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 70 அணிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர்.

    இந்த போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் இந்த போட்டிகளை முன்னிட்டு நடத்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஏலகிரி பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல், உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன், உடற்கல்வி ஆசிரியர் பாலசுந்தரி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    இதேபோன்று தருமபுரி சரக அளவில் மாணவிகளுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் (நாளை) வெள்ளிக்கிழமை தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

    Next Story
    ×