என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கோவையில் காவலாளியை தாக்கிய மகன் கைது கோவையில் காவலாளியை தாக்கிய மகன் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/06/24/1718153-arrest-1.jpg)
கோவையில் காவலாளியை தாக்கிய மகன் கைது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஜாமீனில் வந்த 6 மாதத்தில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
- தியாகராஜனை ஜாமீனில் எடுக்க அவரது தந்தை முத்துசாமி முயற்சி செய்து வந்தார். ஆனால் பணம் பிரச்சினை காரணமாக அவரால் ஜாமீன் பெற முடியவில்லை
கோவை:
பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் சூளேஸ்வ ரன்ப ட்டியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 67). காவலாளி.
இவரது மகன் தியாகராஜன் (38). கூலி தொழிலாளி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் தகராறு ஏற்பட்டது. இது சமந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அப்போது தியாகராஜனை ஜாமீனில் எடுக்க அவரது தந்தை முத்துசாமி முயற்சி செய்து வந்தார். ஆனால் பணம் பிரச்சினை காரணமாக அவரால் ஜாமீன் பெற முடியவில்லை. பின்னர் தியாகராஜனின் நண்பர் ஒருவர் அவருக்கு ஜாமீன் பெற்று கொடுத்தார்.
இதையடுத்து அவர் வெளியே வந்தார். தினமும் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து இட்டு வந்தார். இந்த நிலையில் தியாகராஜன், முத்துசாமியிடம் ஏன் தன்னை ஜாமீனில் எடுக்கவில்லை என கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டு வந்த தியாகராஜன் மீண்டும் முத்துசாமியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த தியாகராஜன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினார்.
பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். பலத்த காயம் அடைந்த முத்துசாமி வலியால் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் முத்துசாமியை மீட்டு கோட்டூர் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து முத்துசாமி கோட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் வந்த தியாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)