என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கூத்தப்பாடியில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு
- போதை பொருள்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளையும் பற்றி பொதுமக்களிடையே எடுத்து கூறினார்.
- பொதுமக்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பொதுமக்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களின் ஆபத்து குறித்து எடுத்துக் கூறும் வகையில் ஒகேனக்கல் போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது கஞ்சா, மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருள்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளையும் பற்றி பொதுமக்களிடையே எடுத்து கூறினார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், தேவராஜன் உள்ளிட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்