search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் பள்ளிகள் அளவிலான அறிவியல் கண்காட்சி
    X

    தென்காசியில் பள்ளிகள் அளவிலான அறிவியல் கண்காட்சி

    • அறிவியல் கண்காட்சியை தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    • அறிவியல் ஆசிரியர் திருமலை கொழுந்து இதற்கானஏற்பாடுகளை செய்திருந்தார்.

    தென்காசி:

    தென்காசி ஒன்றியம் சுவாமி சன்னதி தெருவில் அமைந்துள்ள 7-வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பள்ளிகள் அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தங்களின் அறிவியல் படைப்புகளை காட்டி பரிசுகளை பெற்றனர். தென்காசி மாவட்ட தொடக்கக்கல்வி கல்வி அலுவலர் ஆலோசியஸ் கிறிஸ்டோபர், தென்காசி வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

    ஏற்பாடுகளை பள்ளியின் அறிவியல் ஆசிரியர் திருமலை கொழுந்து செய்திருந்தார். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேனட் பொற்செல்வி வரவேற்று பேசினார். 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் 170 பேர் தங்களின் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

    Next Story
    ×