search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் போட்டோ கடையில் துணிகர கொள்ளை
    X

    சேலம் போட்டோ கடையில் துணிகர கொள்ளை

    • அழகாபுரம் எல்.ஐ.சி. காலனியில் போட்டோ ஸ்டோர்ஸ் கடை நடத்தி வருகிறார்.
    • ரூ. 2 லட்சத்து 23 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் சின்னதிருப்பதி அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் அழகாபுரம் எல்.ஐ.சி. காலனியில் போட்டோ ஸ்டோர்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றவர் நேற்று காலை வந்து பார்த்தபோது கடையில் இருந்த ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே போகுது கல்லாவில் இருந்த ரூ. 2 லட்சத்து 23 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சரவணன் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×