search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வத்தலக்குண்டு இலங்கை அகதிகள் முகாமில் ரூ.16 லட்சத்தில் புதிய பணிகள்
    X

    சாக்கடை அமைக்கும் பணியை ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    வத்தலக்குண்டு இலங்கை அகதிகள் முகாமில் ரூ.16 லட்சத்தில் புதிய பணிகள்

    • கணவாய்பட்டி ஊராட்சி இலங்கை அகதிகள் முகாமில் ரூ.16 லட்சத்தில் புதிய பணிகள் தொடங்கப்பட்டன.
    • அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணவாய்பட்டி ஊராட்சி இலங்கை அகதிகள் முகாமில் ஊராட்சி ஒன்றிய குழு நிதியிலிருந்து சாக்கடை அமைக்கும் பணி மற்றும் குடிநீர் வழங்குவதற்கு ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சாக்கடை தூர் வாரும் பணியினை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன், கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் ஆகியோர் பார்வையிட்டு பணியினை தொடங்கி வைத்தனர்.

    அகதிகள் முகாமை விரிவு படுத்துவதன் நோக்கமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவுரையின்படி கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் அகதிகள் முகாமில் வீடு இல்லாமல் குடியிருப்பவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி, வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய பொறியாளர் பிரிட்டோ, தி.மு.க. நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஜெனித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×