search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
    X

    முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள்

    பழனியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

    • 1979-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டுவரை படித்த மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது
    • 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் நண்பர்களை சந்தித்தது புத்துணர்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    பழனி:

    பழனி சிறுமலர் நடுநிலைப்பள்ளியில் 1979-ம் ஆண்டுமுதல் 1987-ம் ஆண்டுவரை படித்த மாணவர்கள் வாட்ஸ்அப் குழு ஒன்றை தொடங்கினர். இதில் முன்னாள் மாணவர்களை இணைத்து அவர்களை சந்திப்பதற்காக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். சிறுமலர் பள்ளியில் படித்த மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாவும், வக்கீல், ஆசிரியர், தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.

    பலர் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உள்ளனர். முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் குழந்தைகளுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தங்கள் நண்பர்களை சந்தித்தது புத்துணர்ச்சி அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×