search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தக திருவிழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு விநாடி வினா போட்டி
    X

    வெற்றிபெற்ற மாணவர்களுடன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.

    புத்தக திருவிழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு விநாடி வினா போட்டி

    • திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் 9-வது புத்தகத்திருவிழா வரும் அக்டோபர் 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை டட்லி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.
    • போட்டியில் தமிழ், நிகழ்கால அறிவியல், விளையாட்டுக்கள், எளிய விளையாட்டுக் கணிதம், பொது அறிவு, சமூக அறிவியல், நிகழ்கால நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் 7 சுற்றுக்கள் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் 9-வது புத்தகத்திருவிழா வரும் அக்டோபர் 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை டட்லி பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இதையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளை திண்டுக்கல் இலக்கியக்களம் நடத்தி வருகிறது. இதன் இறுதி போட்டியாக கல்லூரி மாணவர்களுக்கான விநாடி- வினா போட்டிகள் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட 15 கல்லூரி அணிகளில் 7 சுற்றுக்கள் முடிவில் ஆர்.வி.எஸ். பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி முதல் இடத்தையும் , பண்ணை பார்மசி கல்லூரி 2 ஆம் இடத்தையும் என்.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.

    விநாடி வினா சுற்றுக்களை முனைவர். சரவணன், முனைவர் பாலசுந்தரி, கணேசன், ரவீந்திரன் குமாரமணி, ஆகியோர் நடத்தினர். இலக்கியக்கள நிர்வாகிகள் தங்கம், பாலாஜி சுப்ரமணியம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பிரித்திவிராஜ், சௌமியா ஆகியோர் கலந்து கொண்டு ஒருங்கிணைத்தனர்.

    போட்டியில் தமிழ், நிகழ்கால அறிவியல், விளையாட்டுக்கள், எளிய விளையாட்டுக் கணிதம், பொது அறிவு, சமூக அறிவியல், நிகழ்கால நிகழ்வுகள் ஆகிய தலைப்புகளில் 7 சுற்றுக்கள் நடைபெற்றது.

    திண்டுக்கல் இலக்கியக்கள துணைத்தலைவர் சரவணன் அனைத்தையும் ஒருங்கிணைத்தார்.

    Next Story
    ×