search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தகராறில் தாக்கப்பட்ட குவாரி தொழிலாளி சாவு
    X

    தகராறில் தாக்கப்பட்ட குவாரி தொழிலாளி சாவு

    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • தாக்கப் பட்டதால் முனியப்பனின் உறுப்புகள் சேதமடைந்து அவர் இறந்துள்ளதால் இது கொலை வழக்காக மாற்றப்படும் என்று தெரிகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் வெங்கட்டானூரை சேர்ந்தவர் முனியப்பன் (58). இவர் ஆந்திர மாநிலம் சோமபுரத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று அங்கு முனியப்பனுக்கும், வேறு சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முனியப்பனைக்கு அவர்கள் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    சிகிச்சை பெற்றுவந்த அவரை அங்கிருந்து கூட்டிவந்து ஊரில் விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று முனியப்பனின் உடல்நிலை மோசமடைந்தது அவரை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை முனியப்பன் உயிரிழந்தார்.

    இது குறித்து மதிகோன்பாளையம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்கப் பட்டதால் முனியப்பனின் உறுப்புகள் சேதமடைந்து அவர் இறந்துள்ளதால் இது கொலை வழக்காக மாற்றப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×