search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஸ் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
    X

    போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

    செஸ் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வட்டார அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது.
    • வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவர் எஸ்.சி.சக்கரவர்த்தி சதுரங்கப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    வாழப்பாடி:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வட்டார அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது.

    விழாவிற்கு, தலைமை ஆசிரியர் ரவிசங்கர் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ் தலைமை வகித்தார். வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவர் எஸ்.சி.சக்கரவர்த்தி சதுரங்கப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் எம்ஜிஆர் பழனிசாமி, அரிமா சங்க பட்டயத் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர், போட்டியில் ஆர்வத்தோடு பங்குபெற்ற மாணவமாணவியர் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

    மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் பி.சி.செல்வம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கோபிநாத், குணாளன், ரமணி ஆகியோர், வெற்றிப்பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவமாணவியருக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை, உடற்கல்வி இயக்குநர் குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிமுருகன், ராமமூர்த்தி, செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×