search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி
    X

    தூத்துக்குடியில் விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி

    • சண்முகவேல் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • பலத்த காயம் அடைந்த சண்முகவேலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல்

    (வயது 39). இவர் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பேச்சியம்மாள் (31).

    விபத்தில் பலி

    இவர் நேற்று மனைவியை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தட்டப்பாறை அருகே உள்ள சொக்கலிங்கபுரத்திற்கு சென்றார். அங்கு பேச்சியம்மாளை விட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பி னார்.

    அவர் செக்காரகுடி அருகே வரும்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×