search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும்-பாரதீய ஜனதா கூட்டத்தில் வலியுறுத்தல்
    X

    பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும்-பாரதீய ஜனதா கூட்டத்தில் வலியுறுத்தல்

    • ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடவேண்டும்,
    • தமிழக அரசு கூடுதல் கொள்முதல் மையங்களை ஏற்படுத்தி கொப்பரை கொள்முதல் செய்யவேண்டும்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை தனிமாவட்டமாக்க வேண்டும் என பாரதீய ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கோவை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியை அடுத்த திவான்சாபுதூரில் நடைபெற்றது. மாவட்ட த்தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆனைமலை மேற்கு ஒன்றியத்தலைவர் வெள்ளியங்கிரி வரவேற்றார்.

    மாவட்ட பார்வையாளர் மோகன்மந்தராச்சலம், கரூர் மாவட்ட பொறுப்பாளர் சிவசுப்ரமணியம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் துரை, கோவிந்தராஜ், ஆனந்த், மாவட்டதுணைத்த லைவர் தனபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ெபாள்ளாச்சி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருப்பதால், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கவேண்டும், ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்றவேண்டும், ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடவேண்டும், அதற்கான அரசாணையை ரத்து செய்யவேண்டும்.

    தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அதிகாரிகள் உதவியுடன் அதிக அளவு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. கனிம வளங்கள் கடத்தலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    பிப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 55 ஆயிரம் டன் கொப்பரையை கொள்முதல் செய்ய மத்திய அரசு கூறியும், தமிழக அரசு 20 ஆயிரம் டன் கொப்பரையை மட்டுமே கொள்முதல் செய்துள்ளது. தமிழக அரசு கூடுதல் கொள்முதல் மையங்களை ஏற்படுத்தி கொப்பரை கொள்முதல் செய்யவேண்டும்.

    வெள்ளலூர் பஸ் நிலைய பணிகள் கடந்த ஆட்சியில் 50 சதவீத பணிகள் முடிக்கப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க. ஆட்சியில் பணிகள் நிறுத்தப்பட்டு ள்ளது. அந்த பணிகளை தொடங்க வேண்டும். பொள்ளாச்சி நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரியை கைவிடவேண்டும். இளை ஞர்களின் வாழ்வை மேம்படுத்தும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டம் பாராட்டுக்குரியது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×