என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
லஞ்சம் வாங்கியபோது சிக்கினார்- கைதான கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் போலீசார் சோதனை
- கைது செய்யப்பட்ட வெங்கடேச பெருமாள் கடம்பூர் அருகே உள்ள காளாங்கரையை சேர்ந்தவர்.
- முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் சிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலராக சேர்ந்துள்ளார்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை அருகே உள்ள சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் ராகவன் (வயது58). இவர் தனது நிலத்திற்கு தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்தார். இது தொடர்பாக சிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாளையும் சந்தித்து முறையிட்டார்.
அப்போது பட்டா மாற்றம் செய்வதற்கு ரூ.14 ஆயிரம் லஞ்சம் தருமாறு வெங்கடேச பெருமாள் கேட்டுள்ளார். இதுகுறித்து ராகவன் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ. 14 ஆயிரத்தை வெங்கடடேச பெருமாளிடம் வழங்கினார்.அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் சுதா அடங்கிய குழுவினர் வெங்கடேச பெருமாளை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வெங்கடேச பெருமாள் கடம்பூர் அருகே உள்ள காளாங்கரையை சேர்ந்தவர். முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் சிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலராக சேர்ந்துள்ளார்.
இதற்கிடையே நேற்று இரவு காளாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு வெங்கடேச பெருமாளை அழைத்து சென்ற போலீசார் அவரது வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்