என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பேட்டையில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
- நெல்லையை அடுத்த பேட்டை மற்றும் கோடீஸ்வரன்நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர் திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
- பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை மற்றும் கோடீஸ்வரன்நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர் திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
ரோந்து போலீசார்
இதனை தடுக்க அந்த பகுதிகளில் இரவு நேரங்களில் கூடுதல் ரோந்து போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகை பறிக்க முயன்றுள்ளனர்.
பேட்டை வீரப்பாநகர் பகுதியில் வசித்து வருபவர் அந்தோணி. இவரது மனைவி தனிகா தேவி(வயது 75). இவரது வீட்டுக்கு கேரளாவில் இருந்து அவர்களது உறவினர்களான லீலாம்மாள்(63), லெசி(55) ஆகியோர் வந்திருந்தனர்.
செயின் பறிக்க முயற்சி
நேற்று இரவு அவர்கள் 2 பேரும் தனிகா தேவியுடன் அந்த பகுதியில் நடை பயிற்சி சென்றனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் லீலாம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்ட அவர் செயினை கையில் பிடித்துக்கொண்டார். உடனே அவர்கள் 3 பேரும் கத்தி கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இதுதொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்