search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியுடன் விஷம் குடித்த பெட்ரோல் பங்க் மேலாளர் பலி
    X

    மனைவியுடன் விஷம் குடித்த பெட்ரோல் பங்க் மேலாளர் பலி

    • கணவரிடம் இருந்து விஷப்பாட்டிலை பிடுங்கி குடித்தார்.
    • மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கோவை:

    கோவை வடவள்ளி அருகே உள்ள வீர கேரளத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 34). இவர் பீளமேட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் கடந்த 12 ஆண்டுகளாக மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது தேவைக்காக வங்கியில் வீட்டு கடன் மற்றும் தனிநபர் கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை ராமகிருஷ்ணனால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராமகிருஷ்ணன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அவரது மனைவி பிரியா (29) கணவரிடம் இருந்து விஷப்பாட்டிலை பிடுங்கி அவரும் குடித்தார். சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கினர். இதனை பார்த்த அவரது உறவினர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் கணவன்-மனைவி இருவரையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராமகி ருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×