search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிக்னல் கோளாறு: கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில் சேவை பாதிப்பு
    X

    சிக்னல் கோளாறு: கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில் சேவை பாதிப்பு

    • சிக்னல் செயல்படாமல் போனதால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
    • கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. புறநகர் பகுதியிலும் லேசான பெய்த மழையால் ரெயில் சிக்னலில் கோளாறு ஏற்பட்டது.

    தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இன்று காலை 7 மணியளவில் சிக்னல் செயல்படாமல் போனதால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதனால் கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    பீக் அவர்ஸ் நேரத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடந்தது. ஆனாலும் 2 மணி நேரம் ரெயில்கள் குறித்த நேரத்திற்கு இயங்க முடியவில்லை.

    காலை 7 மணி முதல் 9 மணி வரை மின்சார ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

    இதனால் குறித்த நேரத்திற்கு ரெயில்கள் நிலையங்களுக்கு செல்ல முடியவில்லை. ஒவ்வொரு ரெயிலும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக வந்ததால் பயணிகள் நிலையங்களில் காத்து நின்றனர். பின்னர் தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதும் வழக்கமாக ஓடியது.

    Next Story
    ×