என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிக்னல் கோளாறு: கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில் சேவை பாதிப்பு
- சிக்னல் செயல்படாமல் போனதால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
- கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
சென்னை:
சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. புறநகர் பகுதியிலும் லேசான பெய்த மழையால் ரெயில் சிக்னலில் கோளாறு ஏற்பட்டது.
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இன்று காலை 7 மணியளவில் சிக்னல் செயல்படாமல் போனதால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதனால் கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
பீக் அவர்ஸ் நேரத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடந்தது. ஆனாலும் 2 மணி நேரம் ரெயில்கள் குறித்த நேரத்திற்கு இயங்க முடியவில்லை.
காலை 7 மணி முதல் 9 மணி வரை மின்சார ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
இதனால் குறித்த நேரத்திற்கு ரெயில்கள் நிலையங்களுக்கு செல்ல முடியவில்லை. ஒவ்வொரு ரெயிலும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக வந்ததால் பயணிகள் நிலையங்களில் காத்து நின்றனர். பின்னர் தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதும் வழக்கமாக ஓடியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்