search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே  மூதாட்டி தண்ணீரில் மூழ்கி பலி
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே மூதாட்டி தண்ணீரில் மூழ்கி பலி

    • முருகேசன் மனைவி அலமேலு (வயது 70) இவர் கடந்த 18ஆம் தேதி 100 நாள் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • இன்று ஏமப்பூர் ஏரியில் ஒரு மூதாட்டி தண்ணீரில் மிதப்பதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்

    விழுப்புரம்:

    விழுப்புரம்மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தொட்டி குடிசை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மனைவி அலமேலு (வயது 70) இவர் கடந்த 18ஆம் தேதி 100 நாள் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்துவிட்டு திருவெண்ணைநல்லூர் காவல்நிலையத்தில் காணவில்லை என புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் இன்று ஏமப்பூர் ஏரியில் ஒரு மூதாட்டி தண்ணீரில் மிதப்பதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விருந்து சென்ற. சப் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ் கர்ணன் ராபர்ட் ஆகியோர் திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×