search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்
    X

    சென்னை மழை

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்

    • சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • வெளுத்து வாங்கும் கனமழையை தொடர்ந்து விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் லேசானது முதல் கன மழை வரை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இதற்கிடையே, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்னை சென்ட்ரல், மதுரவாயல், அம்பத்தூர், போரூர், செம்பரம்பாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. காலை முதல் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

    சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழையை தொடர்ந்து விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளது. துபாய், பக்ரைன் மற்றும் லக்னோ விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

    Next Story
    ×