search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் அருகே   கட்டிடத்தில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
    X

    அரூர் அருகே கட்டிடத்தில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

    • மணிகண்டன் கால்தவறி கீழே விழுந்தார்.
    • பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மணிகண்டன் இறந்துவிட்டதாக கூறினார்.

    அரூர்,

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கல்லுக்குழி முதல் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது35), சுரேஷ், கோபி ஆகியோருடன் அரூர் திரு.வி.க. நகரில் உள்ள எல்.ஐ.சி. அலுவலக கட்டிடத்தில் நேற்று பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக மணிகண்டன் கால்தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயமடைந்த அவர், அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மணிகண்டன் இறந்துவிட்டதாக கூறினார்.

    இது குறித்து அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×