search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி அருகே  விஷ விதைகளை சாப்பிட்ட 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
    X

    தருமபுரி அருகே விஷ விதைகளை சாப்பிட்ட 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

    • கோட்டங்காய் எனப்படும் ஒரு விஷக்காயின் விதையை 5 பேரும் உடைத்து தின்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
    • நள்ளிரவில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.

    தருமபுரி,

    தருமபுரி அருகே பழைய தருமபுரி சின்னத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் மோனிகா (வயது 6), மகன் உதயகார்த்தி(7).

    இந்த குழந்தைகள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் கலையரசு(8), மற்றும் சரத்(6),ஹேமாஸ்ரீ (6) ஆகிய 5 பேரும் நேற்று மாலை விளையாட சென்றுள்ளனர். அப்போது கோட்டங்காய் எனப்படும் ஒரு விஷக்காயின் விதையை 5 பேரும் உடைத்து தின்றுள்ளனர். பின்னர் வீட்டுக்கு சென்று விட்டனர்.

    நள்ளிரவில் 5 குழந்தைகளும் தங்களது வீடுகளில் ஒவ்வொருவராக வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் தாய்,தந்தையர் அலறி அடித்துக்கொண்டு குழந்தைகளை தூக்கி கொண்டு நள்ளிரவு 2.30 மணியளவில் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. ஒரே பகுதியை சேர்ந்த 5 குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×