என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
- தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
- போலீசார் பிரேதத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி அடுத்த எஸ். கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 57). கூலி தொழிலாளி. இவருக்கு 3 மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர். இதில் ஒரு மகன் இறந்து விட்டார். தனபால் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார் .
தனபாலுக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியும், சர்க்கரை வியாதியும் இருந்து வந்துள்ளது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற தனபால் தீராத வயிற்று வலியால் மேல் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
விடியற்காலை தனபாலின் மனைவி பார்த்தபோது மாடியில் தனபால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனையடுத்து மதிகோண்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்