என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆத்தூர் அருகே தொழிலாளி கொலையில் பால் வியாபாரி கைது போலீசுக்கு தகவல் கொடுத்து நாடகமாடியது அம்பலம்
- 20 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார்.
- இந்த நிலையில் முருகேசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தினமும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரையை அடுத்த கோபாலபுரம் கிராமம் நடுவீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். பின்னர் அவர் பச்சையம்மாள் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
முருகேசனுக்கு முதல் மனைவி மூலம் ஒரு மகன், ஒரு மகளும், 2-வது மனைவி மூலம் 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் முருகேசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தினமும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கடந்த வாரம் கோபாலபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ள கருத்தராஜாபாளையத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. மறுநாள் காலை கருத்தராஜாபாளையத்தில் உள்ள மதுக்கடையில் இருந்து சுமார் ½ கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசு சர்க்கரை ஆலை அமைய உள்ள இடத்தின் அருகே முருகேசன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன், மல்லியகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன், மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் முருகேசன், கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் முருகேசனுடன், இரவில் மது அருந்திய அதே பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்பொழுது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது முருகேசன் இறந்து கிடந்த தகவலை முதலில் காவல் நிலையத்திற்கு சென்று கூறியது மல்லிகைகரைப் பகுதியைச் சேர்ந்த பூவரசன். பால் வியாபாரி என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் வெளியானது.
முருகேசன் குடி போதையில் மல்லியகரை பகுதியில் சாலையில் படுத்திருந்தார். அப்போது அந்த வழியே பால் வியாபாரம் செய்ய வந்த பூவரசன் அவரை சாலையில் இருந்து ஓரமாக படுங்கள் எனக் கூறினார். இதனால் போதையில் முருகேசன் தகாத வார்த்தையால் திட்டி பூவரசனை கல்லால் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பூவரசன் சரமாரியாக முருகேசனை தாக்கி கல்லால் தலையில் குத்திவிட்டு சென்றுவிட்டார்.
மறுநாள் காலையில் வந்து பார்க்கும் பொழுது முருகேசன் இறந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக மல்லி கரை போலீசில் ஒருவர் இறந்து கிடக்கிறார் என முதல் தகவலை கூறியுள்ளார். போலீஸ் விசாரணையில் கொலை செய்துவிட்டு நாடகமாடியது கண்டுபிடிக்கபப்ட்டது. இதை தொடர்ந்து முருகேசன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்