என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தெலுங்கானாவில் குமாரபாளையம் லாரி டிரைவர் மர்ம சாவு
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே காவடியான்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 37). லாரி டிரைவர். இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆந்திராவிற்கு லாரி வாடகைக்கு செல்ல வேண்டும் என வீட்டில் கூறி விட்டு சென்றார்.
அவரிடமிருந்து சில நாட்களாக எவ்வித போனும் வரவில்லை என தெரிகிறது.
இவரது உடன் சென்ற திருச்செங்கோட்டை சேர்ந்த மீசைக்காரர் என்ற மற்றொரு டிரைவரை கேட்டதற்கு, தெலுங்கானா மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில், டீ குடிக்க லாரியை நிறுத்தினோம். ஆனால் நான் திரும்பி வந்து பார்க்கும் போது அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இது குறித்து அப்பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது என்றார்.
இதனிடையே போலீசார் விசாரணையில் வனப்பகுதியில் இறந்து 15 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில் சரவணன் உடல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரது, குடும்பத்தார், உறவினர்களுக்கு அங்குள்ள போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் தெலுங்கானா மாநிலத்திற்கு சென்றுள்ளனர். சரவணன் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்