search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு   அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு
    X

    செஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    செஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு

    • திண்டுக்கல் மாவட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.
    • பள்ளி மாணவ, மாணவிகள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்,மாணவ,மாணவிகளுக்கு ஊக்கத் தொகையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தினேஷ்குமார், மாவட்ட அவைத்தலைவர் மோகன், மாவட்ட துணைச் செயலாளா் ராஜாமணி, ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளா் ஜோதீஸ்வரன், ஒட்டன்சத்திரம் நகர செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவருமான வெள்ளைச்சாமி, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன்,

    ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், நகரமன்ற தலைவர் திருமலைச்சாமி மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்பொன்ராஜ், ஒன்றியக் குழு பெருந்தலைவர் சத்தியபுவனா, அய்யம்மாள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகரமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×