search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவியை கடத்திய பால் வியாபாரி கைது
    X

    கைது செய்யப்பட்ட குணசேகரன்

    பள்ளி மாணவியை கடத்திய பால் வியாபாரி கைது

    • திண்டுக்கல் அருகே மாணவியை கடத்திச்சென்ற பால் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்
    • மாணவியை கடத்திய வியாபாரிக்கு சிறை

    வடமதுரை :

    திண்டுக்கல் மாவட்டம் கூத்தாம்பட்டியை சேர்ந்த அரசு ஊழியரின் 11 வயது மகள் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது வீட்டில் வளர்க்கும் மாடுகளை பராமரிக்கவும், பால் கறக்கவும் சிலுவத்தூர் காம்பார்பட்டியை சேர்ந்த குணசேகரன்(40) என்பவர் வந்து சென்றுள்ளார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவியை குணசேகரன் கடத்திச–்சென்றுவிட்டார். பள்ளியில் சென்று விசாரித்த போது மாணவியின் புத்தகப்பை மட்டுமே இருந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் வடமதுரை போலீசில் புகார் அளித்தார். சந்தேகத்தின்பேரில் குணசேகரனின் செல்ேபான் எண்ணையும் போலீசார் டிரேஸ்அவுட் செய்து பார்த்தபோது அவர் மாணவியை கடத்தி வைத்திருப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்களை பிடித்து வந்த போலீசார் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    எதற்காக சிறுமியை கடத்திச்சென்றார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×