என் மலர்
மதுரை
- தி.மு.க.வுடன் எடப்பாடி பழனிசாமி கள்ளக்கூட்டணி வைத்திருக்கிறார்.
- பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. வந்தால் ஏற்க தயார்
மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., அ.ம.மு.க.வுடன் கூட்டணி சேர அதிக வாய்ப்புகள் உள்ளது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிப்பாரா இல்லையா என்பதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதிமுக கூட்டணி சேர வாய்ப்புகள் உள்ளது.
ஏனென்றால் அ.தி.மு.க.-வில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் எங்களுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் உள்ளனர்.
மேலும் 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இல்லாதது மிகப்பெரிய அரசியல் தவறு என்பதை கட்சியினர் உணர்ந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியிடம் சரியாக எடுத்துக்கூறவில்லை. வரும் காலங்களில் அம்மாவின் கட்சியான அதிமுக அழியாமல் இருக்க வேண்டுமானால் உறுதியாக அவர்கள் பா.ஜ.க. கூட்டணியில் சேருவது தான் சிறந்தது. அவர்கள் வேறு யாருடன் கூட்டணி அமைத்தாலும் அது மெகா கூட்டணியாக அமையாது.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும் என தெரியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் மத்திய அரசோ, மாநில அரசோ கவிழும் வாய்ப்புள்ளது.
மத்திய அரசு அ.தி.மு.க. அரசை அழிக்க வேண்டும் என நினைக்கவில்லை. மாறாக தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பலமாக இருக்க வேண்டும் என நினைக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாட்டால் 2026 க்கு பிறகு அ.தி.மு.க. இருக்குமா? என்கிற கேள்வி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தனது 4 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் பயத்தால் தி.மு.க.வுக்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறார். அவர் தி.மு.க. வுடன் கள்ளக் கூட்டணி வைத்து இருக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் பல அரசியல் கட்சிகள் வர உள்ளன. பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. வந்தால் நான் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஆணையத்தால் கிடைத்த வெற்றி தற்காலிக வெற்றியாக உள்ளது.
அ.திமு.க.வில் என்னுடைய சிலிப்பர் செல் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பல்வேறு வழிகளில் நூதனமாக செயல்படும் கும்பலால் விழிபிதுங்கி நிற்போர் ஏராளம்.
- விரைவில் மற்றொரு பெண்ணை அழைத்து வந்து திருமணம் நடத்தி வைப்பதாகவும் பெருமாயியை சமாதானப்படுத்தி உள்ளார்.
'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்', என்ற பாடல் வரிகள் பலரது வாழ்வில் கேட்க மட்டுமே முடிகிறது, அமைவது கிடையாது. அதற்கு காரணம் திருமண பந்தம், பாசம் உள்ளிட்ட அனைத்தும் பணத்தை பிரதானமாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுவதாகி விட்டது. நில மோசடி, கடன் மோசடி, நகை மோசடி பட்டியலில் தற்போது பிரபலமாகி வருவது திருமண மோசடி.
குடும்ப சூழல், வாழ்க்கை பின்னணி, பொறுப்புகளை தாங்கி நிற்கும் ஆண்களின் நிலை அறிந்து அவர்களை மூளைச்சலவை செய்து நடைபெறும் மோசடிகள் எங்காவது நடந்ததாக வந்த தகவல்கள் தற்போது அடிக்கடி நிகழ்வாகி போனது. அதிலும் பல்வேறு வழிகளில் நூதனமாக செயல்படும் கும்பலால் விழிபிதுங்கி நிற்போர் ஏராளம்.
இதில் பணம், பொருட்களை இழந்து வாடும் பலர் தங்களது இயலாமையை வெளி உலகுக்கு சொல்ல முடியாமல் போவதுதான் மோசடி கும்பலை சேர்ந்தவர்களை ஊக்கப்படுத்துகிறது. அப்படியொரு மோசடிக்கு அடித்தளமிட்ட நிலையில் சுதாரித்துக்கொண்ட தாயால் மகனின் மண வாழ்க்கை அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து நடத்தப்பட்ட நூதன மோசடி பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாயி (வயது 58). மற்ற பிள்ளைகளுக்கு திருமணம் வைத்து முடித்த பெருமாயி கடைக்குட்டியான தனது மகன் முருகனுக்கும் மணம் முடிக்க ஏற்பாடுகளை செய்து வந்தார். வயதான காலத்தில் தேடிப்போய் பெண் பார்க்க இயலாத நிலையில், அதற்கான பொறுப்பை புரோக்கரிடம் கொடுத்து பெருமாயி வரன் தேடி வந்தார்.
இதனை அறிந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற பெண், அவருக்கு சமீபத்தில் அறிமுகமாகியுள்ளார். தன்னிடம் ஏராளமான வரன்கள் இருக்கிறது. எனவே உங்கள் மகனுக்கு அவரது விருப்பப்படி நல்ல மனைவி கிடைப்பார். அதனை அமைத்து கொடுக்கத்தானே நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை வார்த்தைகளை உறவினர்களை விஞ்சும் அளவுக்கு பெருமாயி மனதில் விதைத்துள்ளார்.
திருமணத்திற்காக தனக்கு புரோக்கர் கமிஷனாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் விஜயா தெரிவித்துள்ளார். இதை நம்பிய பெருமாயி பணம் வழங்க ஒப்புக்கொண்டார். இதையடுத்து, திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் முருகனுக்கு திருமணம் நடைபெற்றது. விஜயாவுக்கு ஒப்புக்கொண்டதைப்போல, ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை சந்தோஷத்துடன் பெருமாயி வழங்கினார்.
புதிய மண வாழ்க்கை அமைந்த சந்தோஷத்தில் இருந்த முருகனுக்கு மறுநாள் காலை பெரும் அதிர்ச்சியாகவே விடிந்தது. மனைவி என்று வந்த பெண்ணும், அவரது உறவினர்களும் இரவோடு இரவாக நகை, பணத்துடன் கம்பி நீட்டியதைக் கண்டு அவரும், அவரது தாய் பெருமாயியும் அதிர்ச்சியடைந்தனர். புலம்பி அழுத பெருமாயி மகனின் வாழ்க்கையை நாமே பாழடித்து விட்டோமே என்று கதறினார்.
எனினும், தங்களது குடும்ப மானத்தை காக்கும் பொருட்டு, அவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து பெருமாயி, விஜயாவிடம் புகார் தெரிவித்துள்ளார். இதை வருத்தம் கலந்த முகத்தோடு கேட்டுக் கொண்ட விஜயா, தன்னால் ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு தானே பொறுப்பேற்பதாகவும், விரைவில் மற்றொரு பெண்ணை அழைத்து வந்து திருமணம் நடத்தி வைப்பதாகவும் பெருமாயியை சமாதானப்படுத்தி உள்ளார்.
அதன்படி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அருணாதேவி (39) என்ற பெண்ணை அழைத்து வந்த விஜயா அவரை முருகனுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும், அதற்காக தனக்கு மீண்டும் தனக்கு ரூ.1 லட்சம் கமிஷன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். விஜயாவின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பெருமாயி, விஜயாவையும், அவருடன் வந்த அருணாதேவி மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. நகரைச்சேர்ந்த காளீஸ்வரி (52) ஆகியோரை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கையும், களவுமாக பிடித்து, உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். ஒருமுறை ஏமாந்தது போதும், இனிமேலும் ஏமாறக்கூடாது என்ற வகையில் பெருமாயி எடுத்த முடிவு மகனின் மண வாழ்க்கை மீண்டும் பறிபோவதை தடுத்தது.
பெருமாயி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் நூதன மோசடியில் ஈடுபட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற ஜெயா, தூத்துக்குடியை சேர்ந்த காளீஸ்வரி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அருணாதேவி மற்றும் பொள்ளாச்சி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த சீனிவாசன், ஜெயபாரதி, சுஜித்ரா, முரளிதரன் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விஜயா, காளீஸ்வரி, அருணாதேவி ஆகிய 3 பேரை கைது செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் செய்ய பெண் தேடும் இளைஞர்களை குறி வைத்து திருமணம் முடிந்த கையோடு பணம், நகையை கொள்ளையடித்து செல்லும் நூதன மோசடி கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உயர்மட்ட மேம்பால பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும்.
- யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்.
மதுரை:
மதுரையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை சார்பில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகள், கலைஞர் நூற்றாண்டு செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை 13 லட்சத்து 59 ஆயிரத்து 996 பேர் பயன்படுத்தி உள்ளனர். கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,
மதுரை கோரிப்பா ளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 டிசம்பர் மாதத்திற்குள்ளாக முடிவடையும். தற்போது 25 சதவிகித பாலப்பணிகள் முடிவடைந்துள்ளது.
மதுரை அப்போலோ உயர்மட்ட மேம்பால பணிகள் 2025 அக்டோபருக்குள் முடிவடையும். இப்பாலப் பணிகள் 32 சதவீதம் முடிவடைந்துள்ளது.
ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்திற்கும், சாலையில் கட்டப்படும் மேம்பாலத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு, தண்ணீர் திறந்து விடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள் மேம்பாலங்கள் கட்டப்படுகிறது.
2001-ம் ஆண்டு முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் பழகி வருகிறேன். எதிர்முகாமில் இருந்த காலத்தில் திருமாவளவன் என்னுடன் சகோதரத்துடன் பழகக் கூடியவர். விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுக்கவில்லை.
எனக்கும், தி.மு.க.வுக்கும், திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. திருமாவளவன் அறிவார்ந்தவர். யாரும் அழுத்தம் கொடுப்பதை அவர் ஏற்றுக்கொண்டு செயல்பட மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சீமான் போராட்டத்திற்கு போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
- கட்சியும் தேர்தலும் இரண்டாம்பட்சம் தான்; அரிட்டாபட்டி மக்களுக்கு அரணாக நா.த.க.வினர் இருப்போம்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்துக்கு அனுமதி அளித்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.
போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் சீமான் போராட்டத்திற்கு போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தும் மக்களை நேரில் சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார்.
கட்சியும் தேர்தலும் இரண்டாம்பட்சம் தான்; அரிட்டாபட்டி மக்களுக்கு அரணாக நா.த.க.வினர் இருப்போம் என்று அவர் உறுதி அளித்தார்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
- மலைக்குச் செல்ல இன்று அனுமதி ரத்து.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 5-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்ன வாகனம், வெள்ளி பூத வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை கார்த்திகை தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக சிறிய பல்லக்கில் சுவாமி ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக உற்சவர் சந்தையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபம் அருகே உள்ள சகடை தேரில் சுப்பிர மணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமி ரத விதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று மாலை 6 மணிக்கு கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக திருவண்ணாமலை இருந்து நிபுணர் குழுவினர் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
மலை மேல் 3½ அடி உயரம் 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 150 லிட்டர் நெய் 100 மீட்டர் காடா துணி 5 கிலோ கற்பூரம் கொண்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
விழாவில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா மற்றும் கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் பழைய படிக்கட்டு பாதை, புதிய படிக்கட்டு பாதை, கோவில் வாசல்,பேருந்து நிலையம் என நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மலைக்குச் செல்ல இன்று அனுமதி ரத்து செய்யப்பட்டு உரிய அனுமதி சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அத்து மீறி யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக மலையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- நாளை கார்த்திகை தீபத்திருவிழா நாளில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படும்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இந்த நிலையில் அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர் தலத்தை அழித்து அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்துக்கு அனுமதி அளித்த மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து நாளை (13-ந்தேதி) நாம் தமிழர் கட்சி மதுரை மாவட்டம் மேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
இதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சி நிர்வாகிகள் செய்து வந்தனர். போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் சீமான் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நாளை கார்த்திகை தீபத்திருவிழா நாளில் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் ஏற்படும். எனவே போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
- கடலுக்கு மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தனுஷ்கோடியில் கடல் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
ராமநாதபுரம்:
தமிழகத்தின் தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாநிலம் முழுவதும் பெரும் பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.
கடலோர பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது. ராமநாதபுரம் நகர், பரமக்குடி, திருப்புல்லாணி, தொண்டி, ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையும் சாரல் மழை பெய்தது.
இதனால் நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. தொடர் சாரல் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒருநாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளித்து கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் உத்தரவிட்டார்.
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலுக்கு மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்கள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன. தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ராமநாதபுரம்- 24
மண்டபம்- 11.80
ராமேசுவரம்- 8.50
திருவாடானை- 35.60
தொண்டி- 38.20
வட்டாணம்- 32.20
பரமக்குடி- 32.40
வாலிநோக்கம்- 24.60
மாவட்டத்தில் பெய்த மொத்த மழையின் அளவு 349.20 மில்லி மீட்டர் ஆகும்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சாரல் மழை பெய்து வருகிறது. சிவகங்கை நகர், காளையார்கோவில், தேவகோட்டை, கல்லல், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காலையில் தொடர்ந்து மழை பெய்ததால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என பெற்றோர்கள் எதிர் பார்த்தனர். ஆனால் 9 மணி வரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மழை பெய்யும் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு காரணமாக பள்ளிக ளுக்கு விடுமுறை அளிக்கப் படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் மழை யில் நனைந்தபடி பள்ளி களுக்கு சென்றனர். பொது மக்கள் தொடர் மழை கார ணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
புயல் காரணமாக சிவ கங்கை மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையிலும் மாவட்ட நிர்வா கம் குளறுபடியால் பள்ளி களுக்கு விடுமுறை அறி விப்பு வெளியிடவில்லை. அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் கொட்டும் மழையிலும் மாணவ-மாணவிகள் நனைந்தே செல்கின்றனர். தற்பொழுது பருவநிலை காரணமாக காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவி வருகிறது. தற்பொழுது மாணவ மாணவிகள் மழை யில் நனைந்தபடி பள்ளி களுக்கு செல்வதால் தொற்று நோய் பரவுமோ என அச்சமடைந்துள்ளனர்.
விருதுநகர், மதுரை மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மிதமான முதல் சாரல் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு பெய்த மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிக ரித்தது. சிவகாசியில் மழை காரணமாக பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டது. மதுரையில் காலை 8 மணி முதல் தொடர்ந்து மழை பெய்ததால்மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.
- விளாங்குடியில் அதிமுக கொடி மரம் வைக்க அனுமதி கோரிய வழக்கு தொடரப்பட்டது.
- டிஜிபியை எதிர்மனுதாரராக சேர்த்தும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது ? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி இளந்திரையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விளாங்குடியில் அதிமுக கொடி மரம் வைக்க அனுமதி கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பான விசாரணையின்போது, " கொடி மரங்களால் எத்தனை விபத்துகள் நடந்துள்ளது ? எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது ?" என்று டிஜிபி பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அப்போது, பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சி கொடி மரங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது ? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தாமாக முன்வந்து டிஜிபியை எதிர்மனுதாரராக சேர்த்தும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
- தாக்குதல் நடத்தப்பட்டு பெண் வருவாய் ஆய்வாளர் அனிதா செல்போன் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- வி.சி.க.வினர் 21 பேர் மீது சத்திரப்பட்டி போலீசார் 8 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை:
மதுரை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதி வெளிச்சநத்தம் கிராமத்தில் கடந்த 7-ந்தேதி வி.சி.க. தலைவர் திருமாவளவன் கொடியேற்றுவதற்காக, ஏற்கனவே இருந்த 25 அடி உயர கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, அனுமதியின்றி கூடுதல் உயரமுள்ள 45 அடி உயர கொடிக்கம்பத்தை கட்சியினர் நிறுவியுள்ளனர்.
இதனை அகற்றுமாறு வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அறிவுறுத்திய போது கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வருவாய்த்துறை அலுவலர்கள் ராஜேஷ் மற்றும் பரமசிவம், பழனியாண்டி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பெண் வருவாய் ஆய்வாளர் அனிதா செல்போன் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் வருவாய்த்துறை அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக வி.சி.க.வினர் 21 பேர் மீது சத்திரப்பட்டி போலீசார் 8 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மனுதாரர் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து, வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
- வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், முன்பாக விசாரணைக்கு வந்தது.
மதுரை:
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையைச் சேர்ந்த பத்மநாபன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் அருளானந்தம்மாள் நகரில் உள்ள பல ஏக்கர் நிலம் நகராட்சி பள்ளி கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடம் வருவாய் ஆவணங்களில் தஞ்சை மாநகராட்சியின் ஆணையர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு பொன்னுமணி எனும் தனிநபரின் பெயரில் இந்த இடம் சட்ட விரோதமாக மாற்றப்பட்டிருந்தது. சட்ட விரோதமாக, முறைகேடு செய்து தனி நபரின் பெயரில் அந்த இடத்திற்கு பட்டா வாங்கப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையை நகராட்சி அலுவலர்கள் எதிர்த்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தஞ்சை மாநகராட்சியின் ஆணையர், மேயர், வருவாய் அலுவலர்கள் ஆகியோர் இணைந்து சுயநல நோக்கில் சட்ட விரோதமாக அந்த இடத்தை விற்பனை செய்து, தற்போது மேயரின் மனைவியின் பெயரில் அந்த இடம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தற்போதைய தஞ்சை மாநகராட்சி மேயர் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் இந்த விவகாரத்தை தமிழக காவல்துறை விசாரித்தால் விசாரணை நியாயமான முறையில் நடைபெறாது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து, வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி இந்த வழக்கில், வழக்கின் முக்கியத்துவம் கருதி பொன்னுமணி, தஞ்சை மேயரின் மனைவி சங்கீதா, தஞ்சை மாவட்ட வருவாய் மண்டல அலுவலர் ஆகிய 3 பேரையும், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாகவும், வழக்கு தொடர்பாக அவர்களது தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட இடம் குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
- டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
- டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளித்து மதுரை மக்களை அகதிகளாக்கக்கூடாது.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமம் ஏலம் எடுத்ததாக கூறப்பட்டது. இதற்கு அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதன் விவரம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராகவும், தெற்குத்தெரு மேலநாட்டார் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டி டோல்கேட் அருகே இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. மோகன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காலையில் தொடங்கிய தர்ணா போராட்டம் மாலை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்றவர்கள் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளித்து மதுரை மக்களை அகதிகளாக்கக்கூடாது. அரிட்டாபட்டி பல்லுயிர் சூழலை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தர்ணா போராட்டத்தை முன்னிட்டு மேலூர் டி.எஸ்.பி. சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.
- நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரிட்டாப்பட்டி ஏற்கனவே பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.
எனவே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முத்து வேல்பட்டி, கிடாரிபட்டி, எட்டிமங்கலம், செட்டி யார்பட்டி, நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மதுரை மாவட்டம் வெள்ளிமலையாண்டி கோவில் அருகே போராட்டம் நடத்திய மக்கள், தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்று இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.






