search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூசாரிபட்டி ஊராட்சி பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் விழா
    X

    பூசாரிபட்டி ஊராட்சி பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் விழா

    • பூசாரிபட்டி ஊராட்சி பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் விழா நடந்தது.
    • பின்னர் பள்ளிக்கு கம்ப்யூட்டர், பிரிண்டர், எல்.இ.டி. டி.வி, மேஜை, நாற்காலி, இன்வெர்ட்டர், மின்விசிறி ஆகியவற்றை சீர் வரிசையாக வழங்கினர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே உள்ள பூசாரிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடத்தை இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் இணைந்து குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பின்னர் பள்ளிக்கு கம்ப்யூட்டர், பிரிண்டர், எல்.இ.டி. டி.வி, மேஜை, நாற்காலி, இன்வெர்ட்டர், மின்விசிறி ஆகியவற்றை சீர் வரிசையாக வழங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    இதில் கிளாரட் பள்ளி தலைமை ஆசிரியர் சூசைமாணிக்கம், அருள் ஆனந்தர் கல்லூரி அதிபர் ஜான்பிரகாசம், கருமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டீஸ்வரி இளங்கோவன், வட்டார கல்வி அலுவலர் ரங்கநாயகி, தலைமை ஆசிரியர் ராமு, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில ஒருங்கிணைப்பாளர் செல்லபாண்டியன், துணை தலைமை ஆசிரியர் ராமலட்சுமி, மற்றும் கிராம பொதுமக்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுதாகரன், அஜித் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×