search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலிகடலூர் மாவட்ட மீனவர்கள்கடலுக்கு செல்ல தடை
    X

    கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் படகுகள் ஓய்வு எடுப்பதை படத்தில் காணலாம்.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலிகடலூர் மாவட்ட மீனவர்கள்கடலுக்கு செல்ல தடை

    • கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது தொலைதூரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது,
    • இன்று (31-ந் தேதி) முதல் மறுஉத்தரவு வரும்வரை யாரும் கடலுக்கு செல்லக்கூடாது.

    கடலூர்:

    தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது தொலைதூரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என்பதை குறிப்பதாகும்.தையொட்டி கடலூர் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. எனவே, கடலில் சூறைக்காற்றானது 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிைல ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகை மீன்பிடி படகுகளும் இன்று (31-ந் தேதி) முதல் மறுஉத்தரவு வரும்வரை யாரும் கடலுக்கு செல்லக்கூடாது. ஏற்கனவே ஆழ்கடலில் விசைப்படகுகளில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். அல்லது அருகில் உள்ள துறைமுகத்தில் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும்.


    இந்த உத்தரவை மீறி மீனவர்கள் மீன் பிடிக்க சென்றால் அவர்களுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகள் ரத்து செய்யப்படும். மேலும் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளது. விசைப்படகுகளை தவிர்த்து 3,500 படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    Next Story
    ×