search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரியூர் அருகே மலையனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்நாளை நடக்கிறது
    X

    ஏரியூர் அருகே மலையனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்நாளை நடக்கிறது

    • தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே மலையனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடை பெறுகிறது.
    • சுமார் 9 ஆண்டுகளாக இந்த கோவில் பூஜைகள் செய்யப்படாமல், பூட்டப்பட்டிருந்த நிலையில் அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு மலையனூர் மாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    ஏரியூர்:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமகொண்ட அள்ளி ஊராட்சி, மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் ஆகும்.

    சுற்றியுள்ள ராமகொண்ட அள்ளி, புது நாகமரை, சோளப்பாடி உள்ளிட்ட 18 ஊருக்கு, தலைமை மாரியம்மனாக இந்த கோவில் உள்ளது. இந்நிலை–யில் பல்வேறு பிரச்சனை, வழக்கு உள்ளிட்ட காரணங்க–ளால், சுமார் 9 ஆண்டுகளாக இந்த கோவில் பூஜைகள் செய்யப்படாமல், பூட்டப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று பம்பை மேளதாளங்கள் முடங்க, வானவேடிக்கையுடன், காவிரி தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

    இதில் மலையனூர், அழகா கவுண்டனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு, தீர்த்த குடங்களை ஊர்வல மாக எடுத்து வந்தனர். அழகா கவுண்டனூரில் புறப்பட்ட தீர்த்த குட ஊர்வலம், சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலை அடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு யாக பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு நாளை காலை 8.30 மணிக்கு மகா கும்பாபிஷேக நிகழ்வு நடை பெற உள்ளது. இந்த யாக பூஜைகளை இருபதுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, மலையனூர் ஊர் கவுண்டர்கள் மற்றும் விழா குழுவினர்கள் மேற்கொண்டு உள்ளனர்.

    Next Story
    ×