search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
    X

    வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

    • விசைத்தறி பட்டறை உரிமையாளரின் வீட்டு கதவை உடைத்து, தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • 10 பவுன் நகைகளை திருடிச்சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சீத்தப்பட்டி காலனி, நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 53) விசைத்தறி பட்டறை நடத்தி வருகிறார்.இவர் வீட்டை பூட்டிவிட்டு பட்டறைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்ற பார்த்த போது 10 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, பழனிசாமி கொடுத்த புகாரின்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×