என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
- கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை
- இறந்தவர் கறுப்பு நிற டீ சர்ட் அணிந்துள்ளார்.
கன்னியாகுமரி:
குழித்துறை தாமிரபரணி ஆற்றின் சப்பாத்து கடவு பகுதியில் இன்று காலை பொது மக்கள் குளிக்க சென்றபோது 35 வயது மதிக்கதக்க ஆண் பிணம் ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் மிதந்த உடலை மீட்டு கரை சேர்த்தனர். இறந்தவர் கறுப்பு நிற டீ சர்ட் அணிந்துள்ளார். தலையில் காயம் உள்ள நிலையில் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து பிணமாக மிதந்தவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மிதந்த ஆண் உடலால் குழித்துறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்