search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் பந்தல் அமைக்க கொண்டு சென்றபோது விபரீதம் - கம்புகள் இடித்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் காரின் அடியில் சிக்கி படுகாயம்
    X

    நாகர்கோவிலில் பந்தல் அமைக்க கொண்டு சென்றபோது விபரீதம் - கம்புகள் இடித்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் காரின் அடியில் சிக்கி படுகாயம்

    • 2 பேர் தூக்கிச் சென்ற போது கம்பின் ஒரு பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது தட்டியது
    • இந்த விபத்து நடந்த சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள பட்டகசாலியன் விளை பகுதியில் சுடலை மாடசுவாமி கோவில் உள்ளது. இங்கு நடை பெறும் திருவிழாவிற்காக பந்தல் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

    பந்தல் அமைப்பதற்காக தொழிலாளர்கள் வாகன த்தில் இருந்து கம்புகளை இறக்கி கொண்டு சென்றனர். நீளமான கம்பை 2 பேர் தூக்கிச் சென்ற போது கம்பின் ஒரு பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது தட்டியது.

    இதில் இருசக்கர வாகன த்தை ஓட்டிச் சென்ற பெண் உட்பட 2 பேர் கீழே விழுந்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த காரின் அடியில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர்கள் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நடந்த சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×