search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருங்கலில் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் திருட்டு
    X

    கருங்கலில் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் திருட்டு

    • கருங்கல் போலீசில் புகார்
    • கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள நெடியவிளாகம் பகுதியை சேர்ந்தவர் தவசுமணி. இவரது மகன் லெனின் (வயது 43). இவர் கருங்கல் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலையில் கடைக்கு வியாபாரத்திற்கு சென்ற இவர் தனது மோட்டார் சைக்கிளை கடை அருகில் வைத்துள்ளார். இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளை பார்த்தபோது அதனை காணவில்லை. பைக்கை யாரோ திருடி சென்றிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து லெனின் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×