search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் சாவு
    X

    மார்த்தாண்டம் அருகே ஆம்புலன்ஸ் மோதி வாலிபர் சாவு

    • இருசக்கர வாகனத்தில் மாராயபுரம் சாலையில் சென்றார்.
    • தனியார் நிறுவன ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட கண்ணக்கோடு பகுதியை சேர்ந்தவர் மகீன். இவர் பழைய கார்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் மாராயபுரத்தை சேர்ந்த சுதீர் (வயது 42) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மாராயபுரம் சாலையில் சென்றார்.

    அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் நிறுவன ஆம்புலன்ஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகீன் மற்றும் சுதீர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதீர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×