search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகஸ்தீஸ்வரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை
    X

    அகஸ்தீஸ்வரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை

    • வழக்கம்போல் காலை கடை திறக்கும் போது பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது
    • கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடி சென்றது தெரிய வந்தது.

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் மேலசாலையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் என்ற மணி (வயது 50). இவர் கீழசாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இவர் வழக்கம்போல் காலை கடை திறக்கும் போது பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது, உள்ளே சென்று பார்த்த போது கடையில் ஏதோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.20 ஆயிரம் திருடி சென்றது தெரிய வந்தது. இதே போல் அதன் அருகில் உள்ள முருகானந்தம் என்ப வரின் பேன்சி ஸ்டோரிலும் பூட்டை உடைத்து டிராயரில் இருந்த ரூ. 6 ஆயிரத்தையும் திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து தென்தாமரைகுளம் போலீசில் ஜெயச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர் .

    Next Story
    ×