search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு
    X

    செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

    • பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள பாலூர் ஊராட்சி பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று டவர் அமைக்க அனுமதி பெற்றதாக கூப்படுகிறது. ஆனால் அனுமதி பெற்ற இடத்தில் அமைக்காமல் திப்பிரமலை ஊராட்சி அலுவலகம் அருகில் குடியிருப்புகள் மத்தியில் செல்போன் டவர் அமைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனை கண்டித்து திப்பிரமலை ஊராட்சி அலுவலகம் முன்பு ஊராட்சி உறுப்பினர் தவசுமணி தலைமையில் திரண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஜோபி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், துணைத்தலைவர் லெனின்குமார், பாலூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் சதீஷ்குமார், ஜென்சன் முத்துராஜ் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.

    Next Story
    ×