search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருங்கல் அருகே கூலித்தொழிலாளி மர்ம சாவு
    X

    கருங்கல் அருகே கூலித்தொழிலாளி மர்ம சாவு

    • கருங்கல் அருகே கப்பியறை கருக்குப்பனை கூடல்விளையை சேர்ந்த கூலி தொழிலாளி தோட்டத்தில் இறந்து கிடந்தார்.
    • கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:


    கருங்கல் அருகே கப்பியறை கருக்குப்பனை கூடல்விளையை சேர்ந்தவர் கேசரி (வயது 56). இவர் கூலி வேலை செய்து வந்தார். நேற்று காலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த ஜாண் கிறிஸ்டோபர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.


    மாலையில் அவரது மனைவி பத்மாவிற்கு கேசரி தோட்டத்தில் இறந்து கிடப்பதாகவும், மரத்தில் இருந்து விழுந்து இறந்திருக்கலாம் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் அங்கு சென்று பார்த்த போது கேசரியின் தோள்ப ட்டையில் சிராய்ப்பு காயம் இருந்துள்ளது.


    இது குறித்து கேசரியின் மனைவி பத்மா கருங்கல் போலீசில் புகார் தெரிவித்தார். இப்புகாரி ன்பேரில் கருங்கல் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×