என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்
- சப்-இன்ஸ்பெக்டர் - ஏட்டு படுகாயம்
- புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதி கூட்ட விளை என்ற இடத்தை சேர்ந்தவர் பிரடெரிக் பொன்குமார் (வயது 52).
இவர் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். நீரோடி காலனி சோதனை சாவடி யில் பணியில் இருந்த பிர டெரிக் பொன்குமார், பணி முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.
மண்டைக்காடு போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் நெல்சனும் அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். புதுக்கடை அருகே உள்ள பார்த்திபபுரம் - பைங்குளம் சாலையில் செல்லும்போது, எதிர் புறத்தில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பிரெடரிக் ஒட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப் பட்ட பிரடெரிக் பொன் குமார், நெல்சன் ஆகி யோர் பலத்த காயம் அடைந்தனர். பிரடெரிக் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், நெல்சன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்துக்குள்ளான மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த புதுக்கடை கைசூண்டி பகுதியை சேர்ந்த முருகன் மகன் அனோஜ் என்பவரும் காயம் அடைந்தார். அவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்