search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டார் சாலை சீரமைப்பு பணி
    X

    கோட்டார் சாலை சீரமைப்பு பணி

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • தற்பொழுது ஒரு லேயர் மட்டுமே மாநகராட்சி மூலம் போடப்படுகிறது.

    நாகர்கோவில்:

    கோட்டார் சவேரியார் ஆலயத்திலிருந்து ஈத்தாமொழி விலக்கு வரையுள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக பைப் லைன்கள் அமைக்கப்பட்டது.

    பைப் லைன்கள் அமைக்கப்பட்ட பிறகு சாலை சீரமைக்கப்படவில்லை.இதனால் சாலை குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் இருந்தது. இந்த சாலையில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டார்.

    சாலையின் ஓரத்தில் உள்ள கழிவு நீர் ஓடைகளை சீரமைத்தவுடன் சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்தில் உள்ள கழிவுநீருடன் இணைக்கும் வகையில் ராட்சத பைப் அமைக்கப்பட்டது. இதையடுத்து சாலை அமைக்கும் பணி இன்று நடந்தது.மேயர் மகேஷ் இந்த பணியை தொடங்கி வைத்தார்‌.

    இது குறித்து மேயர் மகேஷ் கூறுகையில் இந்த சாலை ரூ.35 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. மாநகராட்சி மூலமாக பணி மேற்கொள்ளப்படுகிறது.

    7 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. தற்பொழுது ஒரு லேயர் மட்டுமே மாநகராட்சி மூலம் போடப்படுகிறது. உடனடியாக நெடுஞ்சாலை துறை மூலமாக இதற்கு மேல் இன்னொரு லேயர் போடுவதற்கான நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்றார். சாலை பணி நடைபெற்றதையடுத்து இந்த சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆணையா ளர் ஆனந்தமோகன், என்ஜினீ யர் பாலசுப்ரமணியன், மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி கவுன்சிலர்கள் ரமேஷ் ,பாலசுப்பிரமணியன், அனந்தலட்சுமி, மாணவர் அணி அமைப்பாளர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×