என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாழக்குடி அருகே டிரைவரின் சாதுர்யத்தால் மயிரிழையில் உயிர் பிழைத்த மூதாட்டி
- மூதாட்டி உயிர் பிழைக்க காரணமான பஸ் டிரைவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு
- அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்
நாகர்கோவில்:
மரணம் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. மாடியில் இருந்து விழுந்து உயிர் பிழைத்தவரும் உண்டு. புல் தடுக்கி விழுந்து இறந்தவரும் உண்டு என்பது பழமொழி. அதனை நிரூபிக்கும் வகையில் பஸ் சக்கரத்தின் கீழ் விழுந்தும் மூதாட்டி ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் நடந்து உள்ளது. மூதாட்டி உயிர் பிழைக்க காரணமான பஸ் டிரைவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவிக்கும் சம்பவம் மூலம் இது வெளி வந்துள்ளது.
குமரி மாவட்டம் தாழக்குடியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம். சம்பவத்தன்று ஆடுகளை வீடுகளுக்கு அழைத்துக் கொண்டு சாலையோரமாக வந்த மூதாட்டி, வயோதிகம் காரணமாக தடுமாறி கீழே விழுந்தார்.
அந்த நேரத்தில் அங்கு அரசு டவுன் பஸ் வந்தது. அந்த பஸ்சின் முன் சக்கரத்தின் அருகே மூதாட்டி விழுந்த போதும் அதிர்ஷ்ட வசமாக டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பினார். ஆம். சரியான நேரத்தில் பஸ்சை டிரைவர் நிறுத்தியதால் மயிரிழையில் மூதாட்டி உயிர் தப்பினார்.
இந்த வீடியோ வெளியானதில் இருந்து பஸ் டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்