என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரியில் இன்று கனமழை
- மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதம்
- பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.90 அடியாக இருந்தது. அணைக்கு 514 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 632 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவ தும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் மழை சற்று குறைந்திருந்தது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்ய தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று காலையிலும் கன மழை கொட்டித் தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் கோட்டார் சாலை மீண்டும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, பூதப்பாண்டி, அருமநல்லூர் பகுதிகளில் இன்று காலையில் மழை வெளுத்து வாங்கியது. காற்றும் வீசியதையடுத்து கொல்லன் துருத்தியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. மின்சாரம் தடைபட்டது.
பண்ணியோடு, காந்தி நகர், உரக்கோணம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். குருந்தன்கோட்டில் அதிகபட்சமாக 21.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குளச்சல், புத்தன் அணை, இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்துகொண்டே இருக்கிறது.
இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கோடை விடுமுறை முடிய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அருவியில் குளிப்பதற்கும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.90 அடியாக இருந்தது. அணைக்கு 514 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 632 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தோவாளை, அனந்தனார் சானலில் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 58.25 அடியாக உள்ளது. அணைக்கு 204 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.81 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 13.61 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 29.04 அடியாகவும் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்