search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அரவிந்த் தகவல்
    X

    பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அரவிந்த் தகவல்

    • விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது.
    • பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பிற்ப டுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர். சீர்மரபினர், கள்ளர் சீர்மரபினர், சிறுபான் மையினர் மாணவர்களுக்கான பள்ளி விடுதிகள் -1, மாணவியர்களுக்கான பள்ளி விடுதிகள்-3, கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள்-1 மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான விடுதிகள்-5 என மொத்தம் 10 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மானவர் மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட் டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயிலும் மாணவ மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர், பிற்பட்ட வகுப்பினர், சிறு பான்மையினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.

    விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் அனைத்து விடுதி மாணவ, மாணவியர்களுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது.

    10ம் வகுப்பு மற்றும்12ம் வகுப்பு பயிலும் மாண வர் மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

    பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத் தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும் இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியு டைய மாணவ மாணவி யர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது காப் பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட் சித்தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையி னர் நல அலுவலகத்தி லிருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலு வலகத்தில் 30.06.2022 க்குள்ளும் கல்லூரி விடு திகளை பொறுத்தவரை 31.07.2022க்குள்ளும். சமர்ப்பிக்கவேண்டும். மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கும்பொழுது சாதி மற் றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான் றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் போது இச்சான்றிதழ்களை அளிக்கலாம்.

    ஒவ்வொரு விடுதியி லும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கி பயிலவும் அனுமதிக்கலாம்.

    எனவே மாணவ மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×