search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே மகளை திருமணம் செய்து வைக்க மறுத்த பெண்ணுக்கு அடி-உதை - வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
    X

    மார்த்தாண்டம் அருகே மகளை திருமணம் செய்து வைக்க மறுத்த பெண்ணுக்கு அடி-உதை - வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

    • சுதாகரன் ஆத்திரம் அடைந்து பேபியை சரமாரியாக தாக்கியுள்ளார். அவரது மகளையும் தாக்கமுயன்றுள்ளார்
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதா கரனை தேடி வருகின்றனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கழுவந்திட்டை பகுதியை சேர்ந்தவர் பேபி (வயது 65).

    இவரது மகள் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து வந்து தாயாருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி நரியன்விளையை சேர்ந்த சுதாகரன் என்பவர் பேபியிடம் கேட்டுள்ளார்.

    ஆனால் பேபி அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இருப்பினும் சுதாகரன் இது தொடர்பாக அடிக்கடி தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பேபி மற்றும் அவரது மகள் தாங்கள் நடத்தும் பெட்டி கடையில் இருந்த போது சுதாகரன் அங்கு வந்தார். அவர் பேபியிடம் மீண்டும் அவரது மகளை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

    இதற்கு பேபி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் சுதாகரன் ஆத்திரம் அடைந்து பேபியை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அவரது மகளையும் தாக்கமுயன்றுள்ளார். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இவர்களது கூச்சல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பேபியை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதா கரனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×