search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜாக்கமங்கலம் அருகே அம்மன் கோவிலில் 8 பவுன் நகை கொள்ளை
    X

    ராஜாக்கமங்கலம் அருகே அம்மன் கோவிலில் 8 பவுன் நகை கொள்ளை

    • ராஜாக்கங்க மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார்
    • ராஜக்க மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே கன்னக்குறிச்சி நடுவூரில் ஈஸ்வரி பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் மாதம் ஒருமுறை செவ்வாய்க் கிழமை வழிபாடும் மற்றும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக கோவில் திறக்கப்படுவது வழக்கம்.

    நேற்று இது போன்று கோவில் திறக்கப்படும் போது கருவறையில் உள்ள கதவு மற்றும் ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஊர் நிர்வாகிகளுக்கு பக்தர்கள் தகவல் தெரிவித்தனர்.

    நிர்வாகிகள் வந்து பார்த்தபோது கோவிலில் அம்மன் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து நிர்வாகி ஸ்ரீதர் தலைமையில் ராஜாக்கங்க மங்கலம் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் ராஜக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×