search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே 4½ பவுன் நகை திருட்டு
    X

    கன்னியாகுமரி அருகே 4½ பவுன் நகை திருட்டு

    • வீட்டின் கதவை உடைத்து துணிகரம்
    • குடும்பத்துடன் மாமனார் வீட்டுக்கு சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சுண்டன் பரப்பு என்ற இடத்தைச் சேர்ந்தவர் வில்டன் (வயது 33). இவர் தனது மனைவி மற்றும்குழந்தைகளுடன்சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு கடந்த 6-ந்தேதி சென்று உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் 12.15 மணிக்கு இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக இவரது வீட்டின் பக்கத்தில் உள்ள உறவினர்கள் அவர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ள னர். உடனே வில்டன் தனது வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தபோதுவீட்டின் முன்பக்க கதவு உடைக் கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள பீரோ திறந்து கிடந்தது.

    அதில் இருந்த 4½ பவுன் தங்க நகையை யாரோ மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது பற்றி அவர் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்கு பதிவாகி இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

    மேலும் அதே நாளில் கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளையில் ராணுவ வீரர் வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்து உள்ளது. இந்த 2 சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்துள்ளதால் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×