search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழி செங்கல் சூளை அதிபர் கொலையில் 3 ரவுடிகள் கைது
    X

    ஆரல்வாய்மொழி செங்கல் சூளை அதிபர் கொலையில் 3 ரவுடிகள் கைது

    • கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்
    • கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 58). இவர் கடந்த 9-ந்தேதி இரவு ஆரல்வாய்மொழி பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்தபோது ஒரு கும்பல் ஏசுதாசனை வழி மறித்து சரமாரியாக குத்தி கொலை செய்தது.

    இதுகுறித்து ஏசுதாசனின் மனைவி ஜெயா கொடுத்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்த அன்பு என்ற அன்பழகன், விஜயன் திருப்பதிசாரத்தை சேர்ந்த மணிகண்டன், மிஷின் காம்பவுண்ட்டை சேர்ந்த தங்கஜோஸ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி ஏசுதாசனின் மனைவி மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஏசுதாசனின் உடலை பெற்று சென்றனர். கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    தனிப்படை போலீசார் தங்கஜோசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைவறைவாகியுள்ள அன்பு, விஜயன், மணிகண்டன் ஆகியோர் குமரி மாவட்டத்தில் மலைபகுதிகளில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப் படை போலீசார் சென்னை விரைந்தனர். அங்கு இருந்த அன்பு, விஜயன், மணிகண்டன் 3 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட அன்புவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது கொலை செய்யப்பட்ட ஏசுதாசனுக்கும், எனது உறவுக்கார பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் இதனால் எங்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏசுதாசனும் அவரது மகனும் என்னை தாக்கினார்கள்.

    இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட விரோதத்தில் அவரை நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டியதாக கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்ட அன்பு, விஜயன், மணிகண்டன் இவரது பெயர்கள் ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×