search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி  பெண் படுகாயம்
    X

    கோப்பு படம் 

    இரணியல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம்

    • எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.
    • இரணியல் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள கண்டன்விளை குழியூர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 52). இவரது மனைவி சாரதாபாய் (48). இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கண்டன்விளை - இரணியல் ரோட்டில் தூய தெரஸ் அரங்கு அருகில் வந்தபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் சாரதாபாய்க்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து அவரது கணவர் ஏசுதாசன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சடையமங்கலம் பவனேஷ் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×