search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவதானப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
    X

    கோப்பு படம்

    தேவதானப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

    • வீட்டின் பூட்டை உடைத்து சூட்கேசில் வைத்திருந்த 7 பவுன் தங்கநகை, ரூ.12ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வசித்து வருபவர் சரோஜா(57). இவரது கணவர் சிதம்பரம் இறந்துவிட்டார்.

    சம்பவத்தன்று கொடைக்கானல் மன்னவனூரில் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். மீண்டும் இரவு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது சூட்கேசில் வைத்திருந்த 7 பவுன் தங்கநகை, ரூ.12ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை திருடுபோயிருந்தது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் சரோஜா புகார் அளித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×